Friday, December 19, 2008

Strange Loop

Starting from Moebius strip(I would say its a simple kind of strange loop), we come across many strange loops. It may sometimes be visual, or audible or sometimes hardly noticeable. Shepard tones are example of audible strange loops. Dorste effect is an example of visual strange loop.
These strange loops could be easily noticeable(I can't say understandable).

Some of the strange loops need bit more smartness even to notice. Not every one can see the beauty in it. Well! people say its strange, but I call it beauty. It needs cleverness to form such a strange loop.

Here is an example
Every natural number can be unambiguously described in fourteen words or less.
I can prove the above statement using smart arguments.
Proof:
1.Suppose there is some natural number which cannot be unambiguously described in fourteen words or less.
2.Then there must be a smallest such number. Let's call it n.
3.But now n is "the smallest natural number that cannot be unambiguously described in fourteen words or less".
4.This is a complete and unambiguous description of n in fourteen words, contradicting the fact that n was supposed not to have such a description!
5.Since the assumption (step 1) of the existence of a natural number that cannot be unambiguously described in fourteen words or less led to a contradiction, it must be an incorrect assumption.
6.Therefore, all natural numbers can be unambiguously described in fourteen words or less!

Fantastic! Isn't? Of course there is something wrong in the proof. But the way its constructed is beautiful. Not every one can see the self referential statement here.

Friday, December 12, 2008

ஆத்திசூடி

கடவுள் வாழ்த்து

"ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே!!"

ஆத்தி சூடி - திருவாத்தி மலர்மாலையை அணிந்த
யமர்ந்த - சிவபெருமானால் விரும்பப்பட்ட ( மேல் அமர்ந்த )
தேவனை- ஆனைமுகக் கடவுளை
ஏத்தி ஏத்தி - பலகாலும் (மேலும் மேலும்)
தொழுவோம் யாமே - நாம் வணக்கம் செய்வோம்
பொருள்: திருவாத்தி மலர்மாலையை அணிந்த சிவபெருமானால் விரும்பப்பட்ட ஆனைமுகக் கடவுளை நாம் பலகாலும் வணக்கம் செய்வோம்!!

1. அறஞ்செய விரும்பு
(அறம் - தருமம்)
தருமம் செய்ய நீ விரும்புவாயாக!!

2. ஆறுவது சினம்
(சினம் -கோபம்; ஆறுவது- தணிவது)
கோபம் தணிந்து விடக்கூடிய தன்மையுடையது!!

3. இயல்வது கரவேல்
(இயல்வது- இயன்ற ; கரவேல்-தருமத்தை செய்யாமல் இரூத்தல் கூடாது)
செய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருத்தல் கூடாது!!

4. ஈவது விலக்கேல்
(ஈவது- கொடுப்பதை; விலக்கேல்-தடுக்காதே)
ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதைத் தடுக்காதே !!

5. உடையது விளம்பேல்
(உடையது- உன்னிடம் உள்ளதை; விளம்பேல்- கூறாதே)
உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி கூறாதே ( பெருமையாக பேசாதே) !!

6. ஊக்கமது கைவிடேல்
(ஊக்கமது - உள்ளக் கிளச்சியை; கைவிடேல் - தளர்ந்து போக விடாதே)
ஒரு காரியத்தை செய்தக்கண் உண்டாகிய உள்ளக் கிளச்சியை தளர்ந்து போக விடாதே!!

7. எண்ணெழுத் திகழேல்
(எண் - கணிதம்; எழுத்து- இலக்கண நூல்; இகழேல் - இகழ்ந்து ஓதுக்கி விடாதே)
கணித நூல் ,இலக்கண நூல் முதலியவைகளை இகழ்ந்து ஓதுக்கி விடாமல் கற்க வேண்டும்.

8.ஏற்பது இகழ்ச்சி
(ஏற்பது - பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி - இழிவு தரும்)
பிறரிடம் சென்று யாசித்தல் இழிவு தரும்.

9. ஐயமிட்டு உண்
(ஐயமிட்டு - கேட்பவற்கு கொடுத்து)
கேட்பவற்கு கொடுத்து உண்ண வேண்டும்

10. ஒப்புர வொழுகு
(ஒப்புர - உலக போக்கிற்கு எற்றவாறு; ஒழுகு - நட)
உலக போக்கிற்கு எற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.

11. ஓதுவது ஒழியேல்
ஓதுவது- கற்பது ஒழியேல்- நிறுத்தாதே
நூல்களைக் கற்பதை நிறுத்தி விடாதே

12.ஓளவியம் பேசேல்
ஓளவியம்-பொறாமை மொழி
பொறாமை மொழிகளைப் பேசுதலை ஒழிப்பாயாக!!

13. அஃகஞ் சுருக்கேல்
அஃகு - தானியம் சுருக்கேல்- சுருக்காதே
நெல் முதலிய தானியங்களைக் குறைவாக விற்காதே!!

14. கண்டொன்று சொல்லேல்
கண்டொன்று- பார்க்காததை
பார்க்காதவற்றைப் பார்த்ததாகப் பேசாதே

15. ஙப்போல் வளை
ஙப்போல்- ங எழுத்து போல்
ஙகரம் போல் உற்றார் உறவினர்களுக்கு வளைந்து கொடு

16. சனி நீராடு
(சனி- குளிர்ந்த)
குளிர்ந்த தண்ணீரில் குளி!!


17 . ஞயம்பட உரை
(ஞயம்பட- இனிமையாக ; உரை - பேசு)
இனிமையான மொழிளையே பேசு!!

18. இடம்பட வீடு எடேல்
(இடம்பட - நிறைய இடம் அடையுமாறு ; எடேல் -எடுக்காதே)
இடம் வீணாகக் கிடக்குமாறு பெரிய வீடு கட்டாதே!!

19. இணக்கமறிந்து இணங்கு
(இணக்கம் அறிந்து - யாருடன் பழகுகிறோம் என்று அறிந்து ; இணங்கு-பழகு)
ஒருவரோடு நட்பு கொள்வதற்கு முன் அவருடைய குணநலன்களை தெரிந்துகொண்டு நட்பு கொள்!!

20. தந்தை தாய் பேண்
(பேண்- காப்பாற்று)
தந்தை தாயைக் காப்பாற்றுவாயாக!!

21. நன்றி மறவேல்
ஒருவர் செய்த நன்றியை என்றும் மறவாதே!

22. பருவத்தே பயிர் செய்
(பருவம் - காலம் பயிர் - வளர்)
எத்தொழிலையும்/எக்கலையையும் செய்ய வேண்டிய காலத்தில் (வளர) செய்வாயாக!

23. மன்று பறித்து உண்ணேல்
(மன்று பறித்து - கைக்கூலி வாங்குதல் (I am not sure but I guess so))
நியாய சபைகளில் நியாயம் கூறுவோனாக இருந்து கைக்கூலி வாங்கி வாழ்க்கை நடத்தாதே!

24. இயல்பு அலாதன செய்யேல்
இயற்கைக்கு மாறுபட்ட காரியத்தைச் செய்யாதே!

25. அரவம் ஆட்டேல்
(அரவம் - பாம்பு)
பாம்பைப் பிடித்து விளையாடதே !

26. இலவம் பஞ்சில் துயில்
(துயில் - தூங்கு)
இலவம் பஞ்சிலானான மெத்தையில் படுத்து உறங்குவாயாக!

27. வஞ்சகம் பேசேல்
மனத்திலே வஞ்சம் வைத்துக் கொண்டு பிறரிடம் பேசாதே!

28. அழகு அலாதன செய்யேல்
நன்மையில்லாத காரியங்களைச் செய்யாதே!

29. இளமையில் கல்
இளம்பருத்திலேயே கல்வியைக் கற்றுக் கொள்!!

30. அறனை மறவேல்
தருமம் செய்தலை எப்பொழுதும் மறக்காமல் செய்வாயாக!!

31 . அனந்தல் ஆடேல்
மிகுதியாகத் தூங்காதே

ககர வருக்கம்

32. கடிவது மற
பிறரோடு கோபமாகப் பேசியதை மற்ந்துவிடு

33. காப்பது விரதம்
உயிர்களைக் காப்பதைக் க்டமையாக எண்ணு

34. கிழமைப்பட வாழ்
உன் பொருள்கள் பிறருக்கு உபயோகப்படுமாறு வாழ்.

35. கீழ்மை அகற்று
இழிவு தரும் குணங்களை நீக்கு

36. குணமது கைவிடேல்
நல்ல குண்ங்ளை விட்டுவிடாதே!

37. கூடிப் பிரியேல்
நல்லவர்களோடு நட்பு கொண்டு பிறகு பிரியாதே!

38. கெடுப்பது ஒழி
பிறரைக் கெடுக்கும்படியான செயல்க்ளை விட்டு விடு!

39. கேள்வி முயல்
நல்லவர்க்ளின் உரைகளை கேட்க முயற்சி செய்!

40. கைவினை கரவேல்
நீ செய்யும் காரியங்களை பிறர் அறியாமல் மறைக்காதே!

41. கொள்ளை விரும்பேல்
பிறருடைய பொருளுக்கு ஆசைபடாதே!

42. கோதாட்டு ஒழி
குற்ற்ம் பொருந்திய விளையாட்டை விட்டுவிடு!

43. கெளவை அகற்று
மற்ற்வர்களைப் பற்றீ கேவலமாகப் பேசாதே!

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்
அரசனுடைய ஆட்சி முறைப்படி நட!!

45. சான்றோர் இனத்து இரு
அறிவில் சிற்ந்த பெரியோர்களின கூட்டத்தில் இரு!!

46. சித்திரம் பேசேல்
வீணான மொழிகளைப் பேசாதே!

47. சீர்மை மறவேல்
சிறப்புக்குக் காரண்மான செயல்களைச் செய்வதற்கு மறவாதே!

48. சுளிக்கச் சொல்லேல்
கேட்பவர்கள் வெறுப்படையும்படியான/க மொழிகளைப் பேசாதே!

49. சூது விரும்பேல்
சூதாடுதலிலே விருப்பங் கொள்ளாதே!

50. செய்வன திருந்தச் செய்
(I hear this from my mom always - Dhenam Thittu vanguven!!)
நீ செய்கிற காரியங்களை செப்பமுறச் செய்வாயாக!!

51. சேரிடம் அறிந்து சேர்
நீ சேருகின்ற இடத்தின் தன்மையறிந்து சேர்!

52. சையெனத் திரியேல்
பார்ப்பவர்கள் சீ என்று வையுமாறு நடந்து கொள்ளாதே!

53. சொற் சோர்வு படேல்
நீ பேசுகின்ற பேச்சு எடுபடாதவாறு தொய்வுடன் பேசாதே!

54. சோம்பித் திரியேல்
(again, I hear this at my home often from people, aiming at me)
எத்தகைய வேலையும் செய்யாமல் சோம்பலுடன் திரியாதே!

தகர வருக்கம்

55. தக்கோன் எனத் திரி
உன் ஒழுக்கத்தைப் பார்ப்பவர்கள் ' இவன்/ள் நல்லவன்/ள்' என்று சொல்லுமாறு நட!

56. தானமது விரும்பு
தானம் கொடுப்பதற்கு விருப்பங்கொள்வாயாக!!!

57. திருமாலுக்கு அடிமை செய்
காத்தற் கடவுளாகிய திருமாலிடம் அன்புடன் சேவை செய்!!

58. தீவினை அகற்று
தீய செயல்களைச் செய்யாதே!!

59. துன்பத்திற்கு இடம் கொடேல்
துன்பம் வரக்கூடிய செயல்களைத் தவிர்ப்பாயாக!!

60. தூக்கி வினை செய்
செய்யும் காரியத்தின் நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து அதனைச் செய்வாயாக!!

61. தெய்வம் இகழேல்
தெய்வத்தை இழிவாகப் பேசுதல் கூடாது

62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
உன்னுடைய நாட்டு மக்களோடு ஒற்றூமையாக வாழ்வாயாக !

63. தையல் சொல் கேளேல்.
பெண்களின் தீய சொற்களைக் கேட்டு நடக்காதே !

64. தொன்மை மறவேல்.
பழமையான ந்ட்பு, உறவு முதலியவைக்ளை மறந்து விடாதே

65. தோற்பன தொடரேல்.

முடிக்கமுடியாத காரியங்களைத் தொடங்காதே

நகர வருக்கம்

66. நன்மை கடைப்பிடி
நன்மையான காரியங்களைத் தொடர்ந்து செய்வாயாக

67. நாடு ஒப்பன செய்
உன்னுடைய நாட்டிலுள்ளோர் ஒத்துக்கொள்ளக் கூடிய காரியங்களையே செய்.

68. நிலையில் பிரியேல்.
உன்னுடைய கொள்கைகளில் இருந்து பின்வாங்காதே

69. நீர் விளையாடேல்.
தண்ணீரிலே விளையாதே

70. நுண்மை நுகரேல்
(நோய் உண்டாக்கத்தக்க) இழிவு பொருளை உண்ணாதே!

71. நூல் பல கல்
பல விதமான கலைகளையும் கற்பாயாக

72. நெற்பயிர் விளைவு செய்
நெற்பயிரை பயிரிடுவயாக!

73. நேர்பட ஒழுகு
தவறான வழியிலேயே செல்லாமல் நேர்மையான வழியிலே நடப்பாயாக

74. நைவினை நணுகேல்
உன்னையோ பிறரையோ வருத்தக்கூடிய காரியங்களைச் செய்யாதே

75. நொய்ய உரையேல்
இழிவான மொழிகளைப் பேசாதே

76. நோய்க்கு இடம் கொடேல்
நோயுண்டாவதற்கு இடங்கொடுக்காதே

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல்
பிறர் இகழ்ந்துரைக்கத்தக்க மொழிகளைப் பேசாதே

78. பாம்பொடு பழகேல்
பாம்பை வளர்த்து அதனுடன் பழகாதே

79. பிழைபடச் சொல்லேல்
பேசுவதில் குற்றம் உண்டாகுமாறு பேசாதே

80. பீடு பெற நில்
பெருமையுண்டாகுமாறு நல்வழியிலே நடப்பாயாக

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
உன்னைப் புகழ்ந்தவரை நீயும் போற்றிவாழ்வாயாக

82. பூமி திருத்தி உண்
நீலத்தை பண்படுத்தி பயிரிட்டு வாழ்வாயாக

83. பெரியாரைத் துணைக் கொள்
அறிவாற்றலில் உன்னைவிட சிறந்தவரைகளையே துணையாகக் கொள்வாயாக

84. பேதைமை அகற்று
அறிவற்ற செயல்களை விட்டொழிப்பாயாக


85. பையலோடு இணங்கேல்
சிறுபிள்ளைத்தனம் உள்ளவர்களோடு இணங்காதே


86. பொருடனைப் போற்றி வாழ்
செல்வம் அழிந்து போகாமல் காத்து வாழ்வாயாக

87. போர்த் தொழில் புரியேல்
போர் புரிவதை ஊக்குவிக்காதே

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல்
எத்தகைய நிலையிலும் கலக்கம் அடையாதே

89. மாற்றானுக்கு இடம் கொடேல்
பகைவனுக்கு இடம் அளிக்காதே

90. மிகைபடச் சொல்லேல்
உரையாடும் போது எதையும் மிகைப்படுத்திக் கூறாதே/ குற்றம் உண்டாகுமாறு பேசாதே

91. மீதூண் விரும்பேல்
மிகுதியாக உண்ண விரும்பாதே

92. முனைமுகத்து நில்லேல்
போர்/ சண்டை நடக்கும் இடத்தில் முதலில் சென்று நிற்காதே

93. மூர்க்கரோடு இணங்கேல்
முரடர்களோடு சேராதே

94. மெல்லி நல்லாள் தோள்சேர்
உனக்குரிய மனைவியோடு மட்டும் வாழ்க்கை நடத்து

95. மேன்மக்கள் சொல் கேள்
நல்லொழுக்கமுள்ள பெரியாரின் சொல்லைக் கேட்பாயாக

96. மை விழியார் மனை அகல்
விலைமாதர் இல்லத்தை விட்டு நீங்குவாயாக

97. மொழிவது அற மொழி
பேசும் சொற்களை சந்தேகம் இல்லாதவாறு பேசுவாயாக

98. மோகத்தை முனி
காம ஆசைகளை விட்டொழிப்பாயாக

வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்
உன்னுடைய ஆற்றலை நீயே புகழ்ந்து பேசாதே

100. வாது முற்கூறேல்
வாக்குவாதம் வருவதற்குரிய சொற்களை நீ முன்னால் பேசாதே

101. வித்தை விரும்பு
கற்பதிலே ஆர்வம் கொள்வாயாக

102. வீடு பெற நில்
நற்கதி அடையும் காரியங்களைச் செய்வாயாக

103. உத்தமனாய் இரு
உலகத்தவருடன் நல்லவனாக நடந்து கொள்

104. ஊருடன் கூடி வாழ்
ஊர்மக்களுடன் ஒற்றுமையாக வாழ்க்கை நடத்துவாயாக

105. வெட்டெனப் பேசேல்
வருத்தம் உண்டாகுமாறு கத்தி வெட்டைப் போல பேசாதே

106. வேண்டி வினை செயேல்
உன் நன்மைக்காக வேண்டுமென்றே தீய காரியங்களைச் செய்யாதே

107. வைகறைத் துயில் எழு
அதிகாலையில் எழுந்திரு

108. ஒன்னாரைத் தேறேல்
பகைவர்களை நம்பாதே

109. ஓரம் சொல்லேல்
நேர்மை தவறி ஒரு பக்கம் பேசாதே!!


Thanks to Maayaa